சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் உட்பட 56 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.