தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 47,000 ரூபாயை நெருங்கியதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 5,835 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.80.20-க்கும், கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.