தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 46 ஆயிரத்து 640 ரூபாய், கிராமுக்கு பத்து ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 830 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் உயர்ந்து 80.50 ரூபாய்க்கும், கீழா வெள்ளி ஆயிரம் ரூபாய் உயர்ந்து 80 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாளில் மட்டும் தங்கத்தின் விலை 1.040 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.