தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து உடல் நலக்குறைவை ஏற்பட்டு வருவதால் ஊதியம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.