நாமக்கல் கொல்லிமலை செங்கரை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவருந்திய மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்போட்டு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை உணவருந்திய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். இதற்கான காரணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.