உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். திமுகவில் சேர்ந்ததால் செந்தில் பாலாஜி பழிவாங்கப்படுகிறார். பொய்யான உடல்நலக் குறைவை காட்டி யாராவது பைபாஸ் சர்ஜரி செய்வார்களா? . அமலாக்கத்துறை காவல் கோரியதும் தவறு. அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததும் தவறு எனவும் தெரிவித்தார்.