அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், நாளை மறுநாள் விசாரிப்பதாக அறிவித்துள்ளது