தமிழ்நாடு முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின்பேரில் நடைபெறும் இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான சோதனைக்கு பிறகு என்னென்ன பொருட்கள். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.