கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனையிட வந்த அதிகாரிகளின் சட்டையை பிடித்து தாக்குதல் நடத்திய திமுகவினர், கார் கண்ணாடிகளை உடைத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நீங்கள் யார்?, உங்கள் ஐடி கார்டுகளை காட்டுங்கள் என அதிகாரிகளிடம திமுகவினர் சோதனை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதேபோல், செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை செய்ய வந்த அதிகாரிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.