செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15ஆம் தேதி தீர்ப்பு என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணையை தள்ளி வைக்க கோரி நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பிப்.15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்டார்.