தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் உள்பட கடும் குற்ற வழக்குகள் உள்ளன. அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடக்கிறது. அதனால், அவர் அமைச்சரவையில் தொடர்வது சட்டமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் அமைச்சர் பதவியில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.