சென்னை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து 70 லட்சம் ரூபாயை அமலாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற செம்மண் அழிக்கப்பட்டு இருந்த நிலையில் செம்மண் குவாரி வழக்கில் நடக்கும் இன்றைய விசாரணையில் ஆஜராக அமைச்சர் பொன்முடி புறப்பட்டார். மேலும் அமைச்சரின் சொகுசு காரையும் அதிகாரிகள் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.