நடிகர் விஜய் நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இதன் மூலமாக விஜயை சீக்கிரம் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் அரசியலில் அடியெடுத்து வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உதவுவது, பாடசாலை தொடங்குவது உள்ளிட்டவற்றை நற்பணி இயக்கத்தின் மூலம் விஜய் செய்து வருகிறார். அந்த வரிசையில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தினர் மக்களுக்கு விலையில்லா தக்காளி வழங்கினார். தக்காளி விலை உச்சத்தில் உள்ளதால் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கினார்.