தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.