மகாகவி பாரதியாரின் தங்கை லட்சுமி அம்மாள் மகன் கே. கிருஷ்ணன் வாரணாசியில் உள்ள பாரதியாரின் இல்லத்தில் இன்று காலமானார். இவருக்கு வயது 97. தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் புலமை பெற்றவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இசைத்துறை பேராசிரியராகவும் பணியாற்றிய இவர் பாரதியாரின் கவிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். கலைத்துறை பணிக்காக தமிழக அரசு விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.