தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாணாபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. புதிய மாவட்டமாக உருவானபோது இரண்டு வருவாய் கோட்டங்கள் இருந்த நிலையில் நிர்வாக ரீதியாக செயல்பட தற்போது வாணாபுரத்தை தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா உருவாகியுள்ளது.