வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. போட்டியின்றி அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியேற்க இருந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் மேற்கொண்ட இந்த நகர்வு அதற்கு முட்டுக்கட்டையாக அமையலாம் என கூறப்படுகிறது.