அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 25 முதல் மே 2ஆம் தேதி வரை நீட் தேர்வு பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மாலை 4.30 வரை நடைபெறும். குறைந்தபட்சம் 40 மாணவர்கள் ஒரு பயிற்சி மையத்தில் இடம்பெற வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.