சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சங்கத்தின் நிறுவனர் போஸ் முன்னிலை வகித்துள்ளார்.

இந்த ஐம்பெரும் விழாவில் முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்று நூல் வெளியிட்டுள்ளார். இந்த விழாவில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் சங்க புரவலர்களுக்கு விருது வழங்கியுள்ளார். இதில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.