சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் வீடுகள் விவசாய கிணறு இடிந்து விழுந்தது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிலர் விபத்துகளில் சிக்கி காயம் அடைகின்றனர். பாசன கண்மாய்கள் மழை தண்ணீர் வரத்தால் வேகமாக நிரம்பியது. சில கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விளை நிலங்களில் நடவு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வருவாய்துறையினர் இடிந்து போன வீடுகள் உள்ளிட்ட சேதம் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.