திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாலமாக தொடங்குகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் திருமலை திருப்பதியில் இருப்பதைப் போல கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி நெடுஞ்சாலை துறை சார்பில் அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதியில் ஒரு பகுதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி 5 மாதங்களாக நடைபெற்று நிறைவடைந்தது. இந்த புதிய சாலையில் இன்று காலை 5.30 மணிக்கு முருகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிமெண்ட் சாலையில் தேர் வருவதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.