திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் ஒரு தலைவர், நான் பேர் சொல்ல விரும்பல. பேட்டி கொடுக்கிறார். பேட்டில சொல்றாரு,  நீட் தேர்வு பற்றி அவர் சொல்றாரு…  பொது தேர்வு ரிசல்ட் வரும்போது இந்த மாதிரி பசங்க தற்கொலை பண்ணிக்கறது எல்லாம் ரொம்ப சாதாரண விஷயம். இந்த மாணவர்கள் எல்லாம் பொது தேர்வில் பெயில் ஆகியா தற்கொலை பண்ணி இருக்காங்க.

தங்கை அனிதா பொது தேர்வில் எவ்வளவு மார்க் தெரியுமா ? 1200 க்கு 1176.  இவங்க எல்லாம் தற்கொலை பண்ணிக்கிட்டது நீட் தேர்வு என்பதால்…  நான் கேக்குற உங்க வீட்ல ஒரு குழந்தைக்கு இப்படி ஆச்சுன்னா…  நீங்க இப்படி பேசுவீங்களா ? இன்னொன்னு சொல்றாரு…  இந்த போராட்டம்…  இந்த உண்ணாவிரத போராட்டமே தேவையற்றது.

நான் இப்ப சொல்றேன் தமிழ்நாட்டுக்கு பாஜக என்ற ஒரு கட்சியே தேவையற்றது. இது தொடர்ந்து கொண்டே போனால் ? நான் சொல்றேன் ஒன்றிய பாஜகவையும் சேர்த்து அதிமுகவையும் தமிழக மக்கள் எப்போதும் மன்னிக்கவே மாட்டார்கள் என தெரிவித்தார்.