தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் விருப்பமுள்ளவர்கள் என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். மேலும் என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.