மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புனேவுக்கு 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஷிந்த்ரோபா கோயிலுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரதில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.