நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்சோலை கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை மலைப்பாம்பு கடித்து கொன்று விழுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ஆட்டை முழுமையாக விழுங்க முடியாமல் மலைப்பாம்பு பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டது தெரியவந்தது. அந்த பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து கோட்டைமலை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.