கடந்த 24 மணி நேரத்தில் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என அவர் அனுமதிக்கப்பட்டிருக்கக்கூடிய மியாட் மருத்துவமனையின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் பூரண நலம் பெறுவார் விரைவில் என நம்பிக்கையும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

முதலில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதன் பிறகு அவர் அந்த சேர்க்கை சுவாசம் அவருக்கு தேவை இல்லை. இயற்கையாகவே அவர் சுவாசிப்பதால் அவர் பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கையானது வெளியிடப்பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர வேண்டும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறி இருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.