தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிர் கடன் வழங்குவது போன்று கல்வி கடன் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், கூட்டுறவுத்துறை எதிர்பார்த்ததை விட கூடுதலாக வளர்ந்து இருப்பதை காண முடிகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிமையான கடன்களை வழங்கி வருகிறோம்.

காலத்திற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில் நவீனமான பல உத்திகளை அரசு செய்து வருகிறது. அதன் பலன்கள் அனைத்தும் மோரிரு மாதங்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் போய் சேரும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை போல கூட்டுறவு வங்கிகளிலும் கல்வி கடன் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.