தமிழகத்தில் ஜல்லி மற்றும் எம் சான்ட் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து பேசிய கோவை கிரஷர் மற்றும் குவாரிகள் சங்கத் தலைவர் பிரகாஷ், கட்டுமான தொழிலை காப்பாற்ற சிறிய அளவிலான விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. நவம்பர் 27ஆம் தேதி முதல் எம்சாண்ட் ஒரு யூனிட் 4,500 ரூபாய், பிசாண்ட் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 20,12,6 சைஸ் ஜல்லி 3 ஆயிரத்து 700 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.