ரயில் பயணத்தின் போது சாதாரண பொதுப் பெட்டிக்கான டிக்கெட்டை வைத்துக்கொண்டு ஸ்லீப்பர் பெட்டியில் பயணம் செய்த பிரபல ஓவியர் ஆகாஷ் செல்வராசுவை, அங்கிருந்த டி.டி.இ முறைப்படி கண்டித்து அபராதம் வசூலித்தார். தன் பணியைத் சரியாகவும் கறாராகவும் செய்த அந்த அதிகாரியிடம் எந்தவிதமான வாக்குவாதத்திலும் ஈடுபடாமல் அபராதத் தொகையைக் செலுத்திய ஆகாஷ், அதன் பிறகு தன் கைவண்ணத்தால் அந்த டி.டி.இ-யின் முகத்தை அப்படியே தத்ரூபமான ஒரு ஓவியமாக வரையத் தொடங்கினார்.

சிறிது நேரத்தில் அந்தத் துல்லியமான ஓவியத்தை டி.டி.இ-யிடம் நேரில் கொண்டு போய் கொடுத்தபோது, அதைத் தன் கையில் வாங்கிய அதிகாரிககு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டதோடு, தனது கடமையைச் செய்ததற்காக வந்த சிறு வருத்தமும் மனதை நெகிழச் செய்யத் தொடங்கியது.

இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களைக் கொண்டுள்ள அந்தத் திறமையான கலைஞர், தனது அழகிய ஓவியத்தை அன்பளிப்பாக வழங்கியதுடன், டி.டி.இ-யின் வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பட இன்னும் கொஞ்சம் மெருகூட்டியும் கொடுத்தார்.

 

இந்த எதிர்பாராத பரிசைக் கண்டு மனம் நெகிழ்ந்துபோன டி.டி.இ, உணர்ச்சி பெருக்கில் கண்கலங்கி அந்த ஓவியருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஒரு சாதாரணமான டிக்கெட் பரிசோதனை நிகழ்வு இருவரின் மனிதநேயமான செயலால் எப்படி ஒரு மறக்க முடியாத அழகான நினைவாக மாறியது என்பதை உணர்த்தும் இந்த நெகிழ்ச்சியான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பலரைக் கவர்ந்து வேகமாகப் பரவி வருகிறது.