தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை இதுவரை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமியை பொது செயலாளராக அங்கீகரிக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.