தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 17.7 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.இந்நிலையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை அதாவது ஜனவரி நான்காம் தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தமிழக தேர்வு துறை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 13ஆம் தேதி தொடங்க உள்ளது.