வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது திரிகோணமலைக்கு கிழக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து இன்று இலங்கை கரையை கடக்க உள்ளது. அதனால் தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளையும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யும். இன்று நெல்லை, குமரி, சிவகங்கை , தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை , மயிலாடுதுறை உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.