உத்திரபிரதேசம் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற அனைத்து மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட பிரதமர் மோடி பிளாஸ்டிக் பைகளுக்கு பாய் பாய் சொல்ல வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலத்தின் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலகங்களிலும், நடத்தப்படும் கூட்டங்களிலும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. அரசின் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்றுவது பற்றி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.