திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு பகுதியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. வனப்பகுதியிலும் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் களக்காடு புலிகள் காப்பகத் துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்படி இன்று ஒரு நாள் மட்டும் தலையணை மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை வனச்சரகர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இன்று சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நாளை முதல் சுற்றுலா பயணிகள் தலையணைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.