கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் சோபா நகரில் வீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பிரமணி(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவரது நண்பர் சாரங்கபாணி(31) டெம்போ சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணி கேட்ட 20 ஆயிரம் ரூபாய் பணத்தை சாரங்கபாணி கடனாக கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் சுப்பிரமணி காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. நேற்று மாலை சுப்பிரமணி வாகன ஸ்டாண்டில் உட்கார்ந்து மது அருந்து கொண்டிருந்தார்.

அங்கு சென்ற சாரங்கபாணி பணத்தை எப்போது தருவாய்? என கேட்ட போது இருவருக்கும் இடையே தவறாக ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சாரங்கபாணி இரும்பு கம்பியால் சுப்பிரமணியனை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுப்பிரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சாரங்கபாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.