தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பொதுமக்கள் எளிதில் பெரும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த குறைதீர் கூட்டங்களின் போது ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், செல்போன் நம்பர் மாற்றம், புதிய ரேஷன் கார்டு மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ரேஷன் கடைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை தெரிவித்தல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த கூட்டங்களை மக்கள் பயன்படுத்தி பயன் பெறலாம். மேலும் சென்னையில் இன்று (மே 13) 19 உதவி மண்டல ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.