கடகம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்ப தேவைகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

மற்றவர்களை நம்பி எவருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். கூடுதல் உழைப்பினால் பணவரவு உண்டாகும். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது, பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரவு திருப்தியளிக்கும். எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். செயலில் வேகம் கூடும். இன்றைய நாள் பிரச்சனையில்லாத நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி உண்டாகும்.

காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். திருமணத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் நல்லபடியாக நடந்து முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு. அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.