தமிழக அமைச்சர்களின் முக்கிய அமைச்சராக தொடர்ந்து வரக்கூடிய அமைச்சர் ஏவா. வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையை தொடங்கியுள்ளனர்.

தமிழகம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட பகுதிகளில் என 40 இடங்களில் இந்த சோதனையில் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் ஏவா வேலுக்கு தொடர்புடைய அலுவலகங்கள்,  மட்டுமல்லாமல் அவருடைய நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுடைய இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தொழில்  ரீதியாக  அவருக்கு சொந்தமான செவிலியர் பயிற்சி பள்ளி,  திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது. வரி ஏய்ப்பு என்கின்ற முக்கிய காரணத்தை அடிப்படையாக வைத்து இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் முதற்கட்ட தகவல்  வெளியாகி உள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.