பாஜக – அதிமுகவின் கள்ளக்கூட்டணியை வீடு வீடாகச் சென்று அம்பலப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுகவினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மக்களுக்கு துரோகம் செய்த அதிமுக, கூட்டணி முறிந்ததாக வேடம்போடுகிறது.

நாம் உழைப்பது இயக்கத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல; நாட்டு மக்களின் விடுதலைக்காகவும்தான். தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திமுக தன் தோளில் சுமந்துள்ளது. வெற்றியை உறுதி செய்யும் உழைப்பை வழங்கட்டும் என கூறியுள்ளார்.