விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் மாரீஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு மாரீஸ்வரிக்கு முத்துகிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு முத்து கிருஷ்ணன் ராணுவ பணியில் சேர்ந்தார். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு சிவகாசி மேஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முத்து கிருஷ்ணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த முத்துகிருஷ்ணன் தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துகிருஷ்ணனை கைது செய்தனர்.