என்எல்சி நிர்வாகத்தை எதிர்த்து இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதன் எதிரொளியாக இன்று கடலூரில் சுமார் 7000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலூரில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகிறது. கடையால் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று ஏற்கனவே கடலூர் ஆட்சியர் அறிவித்திருந்தார். இருந்தாலும் போலீஸ் குவிப்பால் அங்கு தற்போது பதட்டமான சூழல் நிலவி வருகிறது.