திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் எண்ணாயிரம் பிள்ளையார் கோவில் கீழ் தெருவில் மைக்கேல்ராஜ்-மேரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகளும், தருண்(13) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் தருண் 8-ஆம் வகுப்பும், அவரது அக்கா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்ராஜ் இறந்து விட்டதால் மேரி வேலைக்கு சென்று தனது பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் கேம் விளையாடுவது தொடர்பாக அக்கா தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த தருண் தனது வீட்டின் மற்றொரு அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தருணின் அக்கா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது தம்பி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.