பீகார் மாநிலம் ஜமுய் நகரைச் சேர்ந்த காதல் ஜோடி ஒருவர், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி ஓடி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்தப் பெண், திருமணத்திற்குப் பிறகு தன் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றும், என் குடும்பத்தினர் என் கணவரின் வீட்டில் ஏதாவது செய்தால், அவர்களே பொறுப்பாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில், அவர் தனது பெயர், தந்தையின் பெயர், கிராமம், திருமண தேதி ஆகிய தகவல்களை பள்ளி மாணவிகள் போல மனப்பாடம் செய்தவாறு ஆங்கிலத்தில் கூறுகிறார். முழு வீடியோவும் ஆங்கிலத்தில் பேசப்பட்டிருப்பதால், அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

இந்த வீடியோ X தளத்தில் @menirbhay93 என்ற கணக்கில் பகிரப்பட்டிருந்தது. அதனைப் பார்த்த மக்கள், இதுவரை பார்த்த வீடியோக்களில் இது மிகவும் வேறுபட்டதாகவும், அதிலும் அந்த பெண் பேசும் ஆங்கிலம் தான் அதிகம் கவனம் பெற்றுவிட்டதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பலரும் அதில் கலந்துகொண்டு தனது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் – “இது காதல் அல்ல, அவளுடைய ஆங்கில இலக்கணம்தான் பயமுறுத்துகிறது” என எழுதினார். மற்றொருவர் – “அவள் முழு வாக்குமூலத்தையும் மனப்பாடம் செய்திருக்கிறார் போல உள்ளது” என கூறினார். சமூக ஊடகங்களில் இந்த வகை வீடியோக்கள் அதிகமாகத் தோன்றும் நிலையில், இது புதிய பார்வையில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் காணொளி உண்மையா? மேடைபோல் நாடகமா? என்பது தற்போது விவாதமாகியுள்ளது.