அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு வாயிலாக அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.47,000 ஆக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்போது அசாம் மாநில அரசு தன் ஊழியர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா அவரது டுவிட்டரில் சில தகவல்களை தெரிவித்து உள்ளார்.

அதில் ஜனவரி 1ம் தேதி முதல் மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அகில இந்தியப் பணி அதிகாரிகளின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. பிஹு பண்டிகையை கொண்டாடும் விதமாக மாநில அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி 3 மாதங்களுக்கு உயர்த்தப்பட்ட டிஏ வழங்கப்படும் என கேசவ் மஹந்த் கூறியுள்ளார். இதற்காக அசாம் மாநில அரசானது கூடுதலாக ரூ.79.57 கோடி செலவிடப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாநில சேவை விதிகள் 2017ன் படி அகவிலைப்படியுடன் சேர்த்து அகவிலை நிவாரணத்திலும் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி பிஹு பண்டிகைக்கு முன்னதாகவே ஊழியர்களின் வங்கிக்கணக்கில் 3 மாத நிலுவைத்தொகை வரவு வைக்கப்படும். இதன் வாயிலாக ஊழியர்களுக்கு ரூ.50,000 -ரூ.60,000 வரையிலும் கணக்கில் பணம் வரவாகும்.