
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடியவிரைவில் அரசாங்கத்திடம் இருந்து ஒரு பெரிய பரிசு கிடைக்க இருக்கிறது. வர இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது பற்றி அரசு ஒரு முக்கிய முடிவை எடுக்கக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. இதற்குரிய ஒரு சூத்திரத்தை அரசு உருவாக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன் கீழ் ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்படும் என நம்பப்படுகிறது.
அதோடு அவர்களது குறைந்தபட்ச ஊதியத்தையும் உயர்த்த அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்கவேண்டும் என ஊழியர்களின் தரப்பில் இருந்து வெகு நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனை தற்போது அரசு செய்யக்கூடும் என கூறப்படுகிறது