
செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், நிறைய பேரு இரண்டு நாளாக போன் செஞ்சீங்க… போன் எடுக்க முடியல பதில் பேச முடியவில்லை. அதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் போன் எடுக்காமல் இருப்பவன் இல்லை.. எப்பவுமே பதில் சொல்பவன். நடிகர் சங்கம் செய்தது மாபெரும் தவறு…
நாலு மணி நேரத்திற்கு அவர்கள் கொடுத்த பத்திரிக்கை செய்தியை வாபஸ் வாங்கிட்டு, துறை ரீதியாக…. நடிப்பு ரீதியாக…. உங்க பைலாபடி மன்சூர் அலிகானுக்கு கோரிக்கை அல்லது விளக்கம் கொடுங்கள் என்று எனக்கு லெட்டர் அனுப்ப வேண்டும்.
21 நாள் அவகாசம் கொடுத்து லெட்டர் அனுப்பினீர்கள் என்றால், எப்ப கூப்பிட்டாலும்…. போன் பேசியாவது கூப்பிட வேண்டும்…. நேற்று இருந்து அடிக்கிறேன்….. தலைவர் நாசர் போன் எடுக்கவில்லை… விஷால் செயலாளர்…. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு அவர் போன் தானே அது…
பாட்டு ஓடுகிறது… எடுக்க மாட்டேங்குறாரு… கார்த்திக் ஒரு தடவ பேசிச்சி.. இல்லை அண்ணே தப்பு ஏதோ நடந்திருக்கிறது, இதோ பார்க்கின்றேன் என பூச்சி முருகனிடம் சொன்னார். பூச்சி முருகனை கூப்பிட்டால் இப்போ எடுக்க மாட்டேங்குறாரு…மன்சூர் அலிகான் என்றால் என்ன ? இளிச்சவயனா ? மன்சூர் அலிகான் என்ன ? உங்களுக்கு அநாதை பிணமாக தெரிகிறேனா ? டேய்…
இதுதான் உங்களுக்கு சரியான எச்சரிக்கை… ஒழுங்கா நடங்கள்…. நான் எந்திரிச்சேன் என்றால், ஒரு பிரளயமே கிளம்பும்… தமிழ்நாடு என் பக்கம் நிற்கும். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறேன். அரசியல் ரீதியா போராடுவதற்காக… நான் ஆயத்தமாய்க் கொண்டிருக்கிறேன், இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்… 4 மணி நேரத்தில் பிரஸ் ரிலீஸ் வாபஸ் ஆகிவிட்டு, எனக்கு நோட்டீஸ் அனுப்புங்கள்….. பதில் சொல்ல அவகாசம் கொடுங்கள்…. அனைத்து நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.