சென்னை அருகே கங்குவா பட சூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு காயம் என தகவல் வெளியாகி உள்ளது. பூவிருந்தவல்லி அருகே செட் அமைத்து கங்குவா படப்பிடிப்பு நேற்று இரவு நடந்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. 10 அடிக்கு மேல் இருந்த ரோப் கேமரா அருந்து விழுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

அதாவது, ரோப் கேமரா விழுந்து விபத்து ஏற்பட்டதில் நூலிலையில் சூர்யா உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில் சூர்யாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என ஸ்டாண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தகவல் தெரிவித்துள்ளார்.