நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது திரையுலகினர் மட்டுமல்லாமல் பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது . இதனையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக  சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தொண்டை பிரச்சனை காரணமாக பேச முடியாததால் விசாரணைக்கு இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும், நாளை ஆஜர் ஆவதாகவும் காவல்துறைக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார்.