புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு கடந்த 14ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய, அமைச்சர் மா சுப்பிரமணியனிடம், செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்பொழுது பதில் அளித்த அவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களை கூறினா.ர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது ..மன அழுத்தம் காரணமாக அவருக்கு பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்