ஓபிஎஸ் டிடிவி சந்திப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கம்யூனிஸ்ட் போல செயல்படுவோம். எப்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என தனித்தனியாக கம்யூனிஸ்ட் இயக்கம் செயல் படுகிறதோ அதுபோல ஓ. பன்னீர்செல்வம் நானும் அதிமுகவை மீட்டெடுக்க செயல்படுவோம் என தெரிவித்தார்.

எனக்கும் ஓபிஎஸ்-க்கும் சுயநலம் இல்லை. அம்மாவின் உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். பண பலத்தை வைத்துக்கொண்டு, ஆணவம், அகங்காரத்தோடு அதிமுக இயக்கத்தை கபலிகரம் செய்து அரக்கர்கள் போல் நடந்து கொண்டிருப்பவர்களிடமிருந்து அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.